காவல் துறைக்கு பயந்து தலைமறைவான விமல்!
நடிகர் விமல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து தற்போது போலீசுக்கு பயந்து அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
சென்னை: நடிகர் விமல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து தற்போது போலீசுக்கு பயந்து அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விமல். அதையடுத்து அவரின் படம் அவ்வளவு பேசும் வகையில் வெளியாகவில்லை. அதற்கு முக்கிய கரணம் அவரின் போதைப் பழக்கம்தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
நேற்று முன் தினம் பின்னிரவு நேரத்தில் அந்த விடுதிக்கு வந்த விமல்,தனக்கு ஒரு அரை வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அவர் இருந்த நிலையைப் பார்த்து ‘ரூம்ஸ் எல்லாமே ஃபுல்லா இருக்கு,ஸாரி!’என்று சொல்லியிருக்கிறார் அங்கிருந்த நிர்வாகி.ஃபுல் மப்பில் இருந்த விமல் அதையெல்லாம் காதில் வாங்காமல் ரகளையில் ஈடு பட்டிருக்கார்!
ஏற்கனவே அங்கு தங்கியிருந்த தெலுங்கு நடிகர் அபிஷேக் படப்பிடிப்பு முடித்துவிட்டு அங்கு வந்திருக்கிறார். அவர் யார் என்று தெரியாமல் அவரை வம்புக்கு இழுத்து விமலும் அவருடன் வந்த அவரது நண்பர்களும் அபிஷேக்கை தாக்கியுள்ளனர்.
அதையயடுத்து நடிகர் அபிஷேக் சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள காவல் நிலயித்தில் நடிகர் விமல் மற்றும் அவரது நண்பர்கள் மீது மது போதையில் தன்னை தாக்கியதாக புகார் அளித்தார். இதை கண்டு அதிர்ந்து போன விமல் தற்போது போலீசுக்கு பயந்து தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.