காவல்துறை பாதுகாப்புடன் சபரிமலை சென்றனர் 11 பெண்கள்

 

காவல்துறை பாதுகாப்புடன் சபரிமலை சென்றனர் 11 பெண்கள்

பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்ட சென்னையை சேர்ந்த 11 பெண்களும் காவல்துறை பாதுகாப்புடன் தரிசனம் செய்வதற்காக சபரிமலைக்கு சென்றனர்.

திருவனந்தபுரம்: பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்ட சென்னையை சேர்ந்த 11 பெண்களும் காவல்துறை பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்றனர்.

சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு செல்ல விரும்பும் பெண்களை ஒருங்கிணைத்து ‘மனிதி’ என்ற  அமைப்பு பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தது. மேலும், சபரிமலைக்கு வருவதையொட்டி தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேரள அரசுக்கு மனிதி அமைப்பினர் கடிதமும் எழுதினர்.

இதனையடுத்து சென்னையை சேர்ந்த 11 பெண்கள் பம்பை அருகே சென்றபோது கொண்டிருந்தபோது அவர்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் ஐயப்ப பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்களை அனுமதிக்கக்கூடாது என ஐயப்ப பக்தர்கள் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்ட சென்னையை சேர்ந்த 11 பெண்களும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் சபரிமலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.