காவல்துறை பணியாளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்; இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

 

காவல்துறை பணியாளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்; இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

தமிழ்நாடு காவல்துறையில் பணியாளர்கள் உள்ளனர். நடைபெறும் 17வது நாடாளுமன்றத் தேர்தலில், அவர்கள் அந்தந்த மாவட்ட காவல் தலைமையகங்களில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பிற துறைகளில் இல்லாத புதியவகை ஏற்பாடாகும்

சென்னை: காவல்துறை பணியாளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழக்கத்தில் இதனுடன் சேர்த்து 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்நிலையில், காவல்துறை பணியாளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

election commission

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு காவல்துறையில் பணியாளர்கள் உள்ளனர். நடைபெறும் 17வது நாடாளுமன்றத் தேர்தலில், அவர்கள் அந்தந்த மாவட்ட காவல் தலைமையகங்களில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பிற துறைகளில் இல்லாத புதியவகை ஏற்பாடாகும். சென்ற தேர்தலிலும் இதே முறை கடைப்பிடிக்கப்பட்டது. வாக்களிக்க அனுமதிக்காமல், வெற்று தபால் வாக்குப் படிவங்களில் காவலர்களிடம் கையெழுத்தை மட்டும் வாங்கிக் கொள்ளப்படுகிறது. பிறகு உயர் அதிகாரிகள் தாமே அனைத்துப் படிவங்களிலும் டிக் செய்து வாக்களித்து மொத்தமாக வாக்குப் பெட்டியில் சென்ற முறை சேர்த்தார்கள். இப்போதும் அதே நடைமுறையைக் கடைப்பிடிக்க ஆயத்தம் செய்யப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எமக்கு வந்துள்ளன.

police

ஆகவே, தலைமைத் தேர்தல் அதிகாரி அவர்கள் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட வேண்டும். மாவட்ட காவல் தலைமையகங்களில் வாக்குச்சீட்டைச் சேர்க்கும் முறையை கைவிடச் செய்ய வேண்டும். மற்ற அரசுப் பணியாளர்கள் போல வாக்களிக்கவும், காவலர்கள் தாம் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்தவும், சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடப்பதற்கு காவல்துறை மட்டத்திலேயே தடை ஏற்படுவதை விலக்கவும், தக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக தலைமைத் தேர்தல் ஆணையரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் வாசிங்க

கள்ளகாதலால் நடந்த விபரீதம்: இளம்பெண்ணை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட முதியவர்; சேலத்தில் பரபரப்பு!