காவல்துறை கண்காணிப்பிலிருந்து யெஸ்க்கேப் ஆன டிக் டாக் வினிதா..

 

காவல்துறை கண்காணிப்பிலிருந்து யெஸ்க்கேப் ஆன டிக் டாக் வினிதா..

வினிதா தனது டிக் டாக் தோழி அபியுடன் தான் நகையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார் என வினிதாவின் பெற்றோர் புகார் அளித்தனர். 

டிக் டாக் இல் பிரபலமாக இருக்கும் வினிதா என்ற பெண் கடந்த வாரம் தனது வீட்டில் இருந்து 20 சவரன் நகையை எடுத்துக் கொண்டு வெளியேறியுள்ளார். வினிதா தனது டிக் டாக் தோழி அபியுடன் தான் நகையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார் என வினிதாவின் பெற்றோர் புகார் அளித்தனர். 

Tik Tok

அந்த நகையை வினிதா, தனது மற்றொரு தோழியான சரண்யா மூலம் அபியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் பேரில், தேவகோட்டை காவல்துறையினர் அபி மற்றும் சரண்யா ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அதில், வினிதாவின் தோழி அபி, வினிதா தன்னிடம் எந்த நகையையும் தர வில்லை என்று வாக்கு மூலம் அளித்தார். 

அதன் பின், காணாமல் போன வினிதாவை கண்டுபிடித்து போலீசார் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். ஆனால், வினிதா அவரது பெற்றோர்களுடன் செல்ல மறுத்துள்ளார். அதனால் அவரை காரைக்குடியில் உள்ள பெண்கள் விடுதியில் போலீசார் தங்க வைத்துள்ளனர். 

Vinitha

அங்கிருந்தும், வினிதா தப்பி விட்டார் என பெண்கள் விடுதி நடத்தி வருபவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் வினிதாவை தேட ஆரம்பித்துள்ளனர். மேலும், ஏன் வினிதா தனது பெற்றோருடன் செல்ல மறுத்தார், வினிதா திருடி சென்ற நகை என்ன ஆனது, ஏன் வினிதா விடுதியில் இருந்தும் தப்பித்தார் என பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.