காவல்துறையினர் மக்களிடமிருந்து பரிசையோ, பணத்தையோ பெறக்கூடாது- டிஜிபி

 

காவல்துறையினர் மக்களிடமிருந்து பரிசையோ, பணத்தையோ பெறக்கூடாது- டிஜிபி

காவல்துறையினர் யாரும் பரிசுப் பொருட்களோ, வெகுமதியோ பெறக் கூடாது என்று தமிழக டிஜிபி ஜே.கே.திரிபாதி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

காவல்துறையினர் யாரும் பரிசுப் பொருட்களோ, வெகுமதியோ பெறக் கூடாது என்று தமிழக டிஜிபி ஜே.கே.திரிபாதி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

காவல்துறையில் பணிபுரிபவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, எந்த பரிசுப்பொருட்களையும் பெறக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி பரிசுப் பொருட்களை பெற வேண்டுமானால், டிஜிபியின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்றவர்களிடமிருந்து பெறக் கூடிய பரிசுப் பொருளின் விலையானது 200 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

காவல்துறையினர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரதட்சணை பெறக் கூடாது, தொழில் பங்குதாரராக இருக்கக் கூடாது உள்ளிட்ட உத்தரவுகளையும் டிஜிபி பிறப்பித்துள்ளார். இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.