காவலர்களை வைத்து டிக்டாக் வீடியோ எடுத்த 5 பேர் கைது!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே காவலர்களை வைத்து வீடியோ எடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே காவலர்களை வைத்து வீடியோ எடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 62வது நினைவு தினத்தையொட்டி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக ஆயிரத்து 804 பேர் போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்விற்காக 65 கண்காணிப்பு கேமிராக்கள் , 6 கண்கானிப்பு கோபுரங்கள் , ஐந்து முக்கிய இடங்களில் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு என உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இமானுவேல் சேகரன் நினைவுநாள் பாதுகாப்பு பணியில் இருந்த 2 காவலர்களை வைத்து டிக் டாக் வீடியோ எடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு சென்ற போலீசாரை வைத்து டிக் டாக் வீடியோ எடுத்த மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.