காவலரை ஒருமையில் பேசிய ஆட்சியர் பொன்னையா மீது புகார் 

 

காவலரை ஒருமையில் பேசிய ஆட்சியர் பொன்னையா மீது புகார் 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு எதிரான புகாரை பதிவு செய்த ராமேஸ்வரம் டவுன் போலிசார் புகாரை பதிவு செய்ததற்கான நகலை வழங்கியுள்ளனர். 

காவலரை ஒருமையில் பேசிய ஆட்சியர் பொன்னையா மீது புகார் 

அத்திவரதர் வழிபாட்டுக்கு வந்த மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஒருமையில் பேசி மிரட்டியிருக்கிற காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. காவல்துறை அதிகாரியை ஒருமையில் பேசி மிரட்டிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். 

காவல் ஆய்வாளரை ஒருமையில் பேசியதற்கு ஆட்சியர்  பொன்னையா வருத்தம் தெரிவித்துள்ளார்.  பாதுகாப்பு பணியில் அதிகப்படியான குளறுபடிகள் இருந்ததால் கோபப்பட்டுவிட்டேன். இனி இதுபோல தவறுகள் நடக்காது என மன்னிப்பு கேட்டுள்ளார். 

இதனிடையே காவல்துறை அதிகாரியை பணி செய்யப்படாமல்  பொது இடத்தில் அவமரியாதையாக பேசிய ஆட்சியர் பொன்னையா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து மக்கள் கட்சிதலைவர் பிரபாகரன் புகார் அளித்துள்ளார்.