காவலருக்கு கொரோனா உறுதி.. தனிமைபடுத்தப்பட்ட 24 காவலர்கள்!

 

காவலருக்கு கொரோனா உறுதி.. தனிமைபடுத்தப்பட்ட 24 காவலர்கள்!

மருத்துவர்கள், காவலர்கள், சுகாதாரத் துறையினர், துப்புரவு பணியாளர்கள் என ஆயிரக் கணக்கான மக்கள் கொரோன தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவர்கள், காவலர்கள், சுகாதாரத் துறையினர், துப்புரவு பணியாளர்கள் என ஆயிரக் கணக்கான மக்கள் கொரோன தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என புகார் எழுந்த வண்ணம் உள்ளது. மின்னல் வேகத்தில் பரவி வரும் இந்த கொரோனா வைரஸ், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பரவி வருவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே . தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மருத்துவர்கள்,5  செவிலியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், பெரம்பலூர் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ttn

அதனால் அவருடன் பணியாற்றிய வி.களத்தூர் காவல் நிலைய காவலர்கள் 24 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  அவர்கள் அனைவரும் தற்போது பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகிறது.