காளைமாட்டில் பால் கறக்க முயற்சிக்கிறது பாஜக! சிவசேனா கடும் தாக்கு!

 

காளைமாட்டில் பால் கறக்க முயற்சிக்கிறது பாஜக! சிவசேனா கடும் தாக்கு!

மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் ஆதரவுடன் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்து உள்ளதை அம்மாநிலத்தில் உள்ள சிவசேனா கட்சி மிகக் கடுமையாக விமர்சித்து உள்ளது. மகாராஷ்டிராவில், தேவேந்திர பட்னாவிஸ் ஒரு திருடனை போல பதவி ஏற்றுக் கொண்டார்.

மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் ஆதரவுடன் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்து உள்ளதை அம்மாநிலத்தில் உள்ள சிவசேனா கட்சி மிகக் கடுமையாக விமர்சித்து உள்ளது. மகாராஷ்டிராவில், தேவேந்திர பட்னாவிஸ் ஒரு திருடனை போல பதவி ஏற்றுக் கொண்டார்.

bjb

தேசியவாத காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து அஜித்பவார் திருடி கொண்டு வந்த ஆதரவு கடிதத்தை ஏற்று கவர்னர் ஆட்சி அமைக்க வைத்தது மோசடியின் உச்சம் என்றும் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான ‘சாம்னா’வில் கூறப்பட்டிருக்கிறது.  
25 ஆண்டுகால சிவசேனாவின் நட்பை மதிக்காதவர்கள் ஒருநாள் அஜித்பவாரையும் தூக்கி வீசுவார்கள் என்றும், பாரதீய ஜனதா கட்சியும், அஜித்பவாரும் சேர்ந்துக் கொண்டு ஒட்டு மொத்த மாநிலத்தையும் ஏமாற்றி விட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

sivasena

மேலும் சட்டசபையில் பாரதீய ஜனதா பெரும்பான்மையை நிரூபிக்கும் என்பது காளை மாட்டில் பால் கறப்பதற்கு சமம் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது