கால் டாக்சி, ஆட்டோ கட்டணம் உயரும் அபாயம்: காரணம் இதுதான்!

 

கால் டாக்சி, ஆட்டோ கட்டணம் உயரும் அபாயம்: காரணம் இதுதான்!

28 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குச்  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், இந்தியாவில் வாடகைக் கார், ஆட்டோ கட்டணங்கள் ஆகியவை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

taxi

28 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குச்  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையின் மீது  கடந்த சனிக்கிழமை  தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால்  கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது.இதன் காரணமாகக்  கச்சா எண்ணெய் விலை  விலையானது ஒரே நாளில்  20 %  அதிகரித்துள்ளது. 

taxi

இந்நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை விலை உயர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வாடகைக் கார், ஆட்டோ கட்டணங்கள், விமான கட்டணம் ஆகியவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.