கால்கள் இல்லையென்றாலும் கவலையில்லை! பார்ப்போரை நெகிழச் செய்யும் நாய்குட்டியின் வைரல் வீடியோ

 

கால்கள் இல்லையென்றாலும் கவலையில்லை! பார்ப்போரை நெகிழச் செய்யும் நாய்குட்டியின் வைரல் வீடியோ

என்னடா வாழ்க்கை இது? நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது  என்று எப்போதும் நினைப்பவரா நீங்கள்? அப்ப இந்த பதிவு உங்களுக்கு தான். எப்போதாவது ஒரு கட்டத்தில் நாம் வாழ்க்கையை வெறுத்துவிடுவோம். வாழ்க்கையின் தத்துவங்களை ஒரே வரியில் எளிமையாக சொல்லிவிட்டுப் போய் விடுகின்றன சமூக வலைத்தளங்கள். 

என்னடா வாழ்க்கை இது? நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது  என்று எப்போதும் நினைப்பவரா நீங்கள்? அப்ப இந்த பதிவு உங்களுக்கு தான். எப்போதாவது ஒரு கட்டத்தில் நாம் வாழ்க்கையை வெறுத்துவிடுவோம். வாழ்க்கையின் தத்துவங்களை ஒரே வரியில் எளிமையாக சொல்லிவிட்டுப் போய் விடுகின்றன சமூக வலைத்தளங்கள். 

உங்கள் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், வரும் சவால்களை எதிர்கொள்ளவும், உங்களை வாழ்க்கை பயணத்தில் மகிழ்ச்சியோடு பொருத்திக்கொள்ள உதவும் எக்கச்சக்க விடியோக்கள் இணையத்தில் உள்ளன. சில விடீயோயோக்களை பார்க்கும் போதுதான், நாம் எவ்வளவு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது புரியும்.

sad-people

உங்கள் வாழ்க்கை கஷ்டம் என்று நினைத்தால் இந்த நாய்க்குட்டியைப் பாருங்கள்
பூச் என்ற இந்த நாய்குட்டி எதோ ஒரு விபத்தில் தன் இரு கால்களையும் இழந்துவிட்டது.
இரண்டு கால்கள் இல்லையென்றாலும் அதன் உத்வேகம் நின்று போகவில்லை. இந்த விடியோவில் அந்த கால்கள் இல்லாத நாய்குட்டி எழுந்து நிற்க முயற்சி செய்து தவறுகிறது. தனது முழு முயற்சியோடு நடந்து சாலையை அழகாக கடக்கிறது. பூச்சின் உற்சாகத்தைப் பார்த்து பார்வையாளர்களும் ஆச்சரியப்பட்டனர். சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த பலராலும் பாராட்டப்பட்டது.

இந்த வீடியோ பார்ப்பதற்கு பழையது போல் தெரிகிறது, இந்திய வன அலுவலர் சுசாந்தா நந்தா இந்த வீடியோவாய்ப்பு  பகிர்ந்த பிறகு மீண்டும் வைராலகியுள்ளது. அந்த பதிவில், “நமது ஆசையால் எதுவும் மாறாது. ஆனால் நமது உறுதி எல்லாவற்றையும் மாற்றும் என்று எழுதியிருந்தார். இந்த நாய்குட்டியின் விடியோவைப் பார்ப்போர் அனைவருக்கும் புது தன்னம்பிக்கை பிறக்கிறது என்று பலரும் கூறியுள்ளனர்.