காலை அதிமுக… மாலை திமுக : ஒன்றிய கவுன்சிலர் கட்சி மாறியதால் நடந்த குழப்பம்!

 

காலை அதிமுக… மாலை திமுக : ஒன்றிய கவுன்சிலர் கட்சி மாறியதால் நடந்த குழப்பம்!

மறைமுக தேர்தல் நடக்காத இடங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தும் படி அறிவிக்கப்பட்டது.

மறைமுக தேர்தல் நடக்காத இடங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தும் படி அறிவிக்கப்பட்டது. அதே போல, திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட  துரிஞ்சாபுரம் பகுதியில் மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில்,  ஒன்றிய கவுன்சிலர்கள் அதிமுகவில் 10 பேரும் திமுகவில் 10 பேரும் இருந்ததால் யார் வெற்றி பெறுவார்கள் என்று குழப்பம் நீடித்து வந்தது. இது மட்டுமில்லாமல் பல உறுப்பினர்கள் தேர்தலில் கலந்து கொள்ளாததால் 3 ஆவது முறையாகத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. 

ttn

இந்நிலையில் நேற்று காலை அதிமுகவுக்கு ஆதரவாக இருந்த 6ஆவது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் சாந்தி ஜெகதீசன், மாலை திமுகவில் சேர்ந்து கொண்டார். இதனால் திமுகவின் பலம் 11 ஆக உயர்ந்ததால்  தேர்தல் நடைபெற்றது. அதில், ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பா.ம.க சார்பில் போட்டியிட்டு, திமுகவில் இணைந்த  5ஆவது வார்டு உறுப்பினர் உஷாராணி சதாசிவம் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே போல கலசபாக்கம், புதுப்பாளையம் உள்ளிட்ட இடங்களிலும் அதிமுக தோல்வி அடைந்தது.