“காலையில் பால்காரர், இரவில் கொள்ளைக்காரர்”-திருடனுக்கு வந்த பெண் சபலம் -அதனால் மாட்டிய அவலம்..

 

“காலையில் பால்காரர், இரவில் கொள்ளைக்காரர்”-திருடனுக்கு வந்த பெண் சபலம் -அதனால் மாட்டிய அவலம்..

சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் திருட வந்த இளைஞன் ஒரு பெண்ணை கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்தான். வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளின் உதவியுடன் போலீசார்அவரை கைது செய்தனர்.

சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் திருட வந்த இளைஞன் ஒரு பெண்ணை கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்தான். வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளின் உதவியுடன் போலீசார்அவரை கைது செய்தனர்.

புதன்கிழமை அதிகாலை அண்ணா நகரில் உள்ள ஒரு அப்பார்ட்மென்டில் ஒரு  பெண் கட்டிடத்தின் மொட்டை மாடியில் உள்ள ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அவரது கணவர் வேறு அறையில்  தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டிற்குள் திருட வந்த ஒரு திருடன், அந்த பெண்ணை கத்திமுனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். அப்போது அந்தப் பெண் கத்தி அனைவரையும்  எழுப்பியபோது அவர் பயந்து தப்பி ஓடிவிட்டார். பிறகு அந்த பெண் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

woman-abuse-78

விரைந்து வந்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை  பரிசோதித்து, அந்த திருடன் அமிஞ்சிக்கரையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என கண்டுபிடித்தனர். அந்த கட்டிடத்தில் விலையுயர்ந்த  பொருட்களைத் திருட வந்த ராமகிருஷ்ணன், மொட்டை மாடியில் ஒரு பெண் தனியாக தூங்குவதைக் கவனித்த பின்னர், அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முடிவு செய்ததாக போலீசார் தெரிவித்தனர். அவருக்கு எதிராக அண்ணா நகர் முழுவதும் நிறைய வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அவர் திருட்டுக்கு நோட்டமிட  அந்த பகுதியில் காலையில் பால் விநியோகம் செய்து,  இரவில் கொள்ளையடிப்பதாக  ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.