காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரர்… பொங்கல் வாழ்த்தோடு சேர்த்து ரஜினியை வறுத்தெடுத்த உதயநிதி

 

காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரர்… பொங்கல் வாழ்த்தோடு சேர்த்து ரஜினியை வறுத்தெடுத்த உதயநிதி

இந்த விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா  நாயுடு, நடிகர் ரஜினிகாந்த்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

துக்ளக் பத்திரிக்கையின் 50- வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று  நடைபெற்றது.  இந்த விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா  நாயுடு, நடிகர் ரஜினிகாந்த்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மோடி காணொளி மூலம் சோ குறித்து பேசினார்.

rajini

அப்போது பேசிய ரஜினிகாந்த், ‘ சோ மீது உள்ள மரியாதையால் தான் பிரதமர் துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இந்த விழாவில் பங்கேற்கின்றனர். முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் என சொல்லிவிடலாம் ஆனால் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்’ என்று பேசியிருந்தார். 

இந்நிலையில் நடிகரும் திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள்’ என்று பொங்கல் வாழ்த்தோடு சேர்த்து ரஜினியையும்  சாடியுள்ளார்.