கார் விபத்தில் சிக்கிய இசையமைப்பாளர் பாலபாஸ்கர் உயிரிழப்பு!

 

கார் விபத்தில் சிக்கிய இசையமைப்பாளர் பாலபாஸ்கர் உயிரிழப்பு!

பிரபல இசையமைப்பாளரும், வயலின்ஸ்டுமான பாலபாஸ்கர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவனந்தபுரம்: பிரபல இசையமைப்பாளரும், வயலின்ஸ்டுமான பாலபாஸ்கர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மலையாள திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர் பாலபாஸ்கர் கடந்த மாதம் 25ம் தேதி திருச்சூர் அருகே வடக்குநாதர் கோவிலுக்கு தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். வழிபாடு முடிந்து வீடு திரும்பியபோது அதிகாலை 4.30 மணியளவில் பள்ளிபுரம் அருகே இவரது கார் விபத்துக்குள்ளானது.

balabhaskar

இந்த கோர விபத்தில் பாலபாஸ்கரின் மகள் தேஜஸ்வினி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் படுகாயம் அடைந்த பாலபாஸ்கர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது மனைவி லக்ஷ்மி மற்றும் கார் ஓட்டுநர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

balabhaskar

கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் திருமணமான பாலபாஸ்கர்-லக்ஷ்மி தம்பதிக்கு நீண்ட வேண்டுதல்களுக்கு பிறகு 12 ஆண்டுகள் கழித்து மகள் தேஜஸ்வினி பிறந்துள்ளார். கடவுளுக்கு நேர்த்திகடனை தீர்ப்பதற்காக எர்ணாகுளம், திருச்சூர் பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்திருப்பது மலையாள திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.