கார் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து…பொள்ளாச்சி ஜெயராமனின் உறவினர் உள்பட 4 பேர் பரிதாப பலி!

 

கார் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து…பொள்ளாச்சி ஜெயராமனின் உறவினர் உள்பட 4 பேர் பரிதாப பலி!

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்டெர்லைட் ஆலைப் பகுதி அருகே திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த கார் மீது  கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ttn

 இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இறந்தவர்களின் சடலங்களைக் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

ttn

 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விபத்தில் உயிரிழந்தது தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸின் பேரன் நீரேந்திரன், ரம்யா, ரம்யாவின் தோழி பார்கவி மற்றும் கார் ஓட்டுநர் ஜோகன் என்பது தெரியவந்துள்ளது.  இதையடுத்து லாரி ஓட்டுநர் சந்திரகேகர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.