கார் மோதி பத்திரிக்கையாளர் பலி! குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி பணியிடை நீக்கம்..

 

கார் மோதி பத்திரிக்கையாளர் பலி! குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி பணியிடை நீக்கம்..

கார் விபத்து தொடர்பாக கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கார் விபத்து தொடர்பாக கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஸ்ரீராம் வெங்கிடராமன் கேரள மாநில சர்வே துறை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் திருவனந்தபுரம் அருங்காட்சியக சாலையில் ஒரு சொகுசு காரில் மது போதையில் வேகமாக சென்றுள்ளார்.  அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த பத்திரிகையாளர் முகமது பஷீர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஸ்ரீராம் வெங்கிடராமன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது அவரது பணியும் பறிக்கப்பட்டுள்ளது. அவரை பணியிடை நீக்கம் செய்து கேரள தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் உத்தரவிட்டுள்ளார்.