கார் மீது மோதிய லாரி.. சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழப்பு : டிரைவரின் தூக்க கலக்கத்தில் நடந்ததா? போலீசார் தீவிர விசாரணை!

 

கார் மீது மோதிய லாரி.. சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழப்பு : டிரைவரின் தூக்க கலக்கத்தில் நடந்ததா? போலீசார் தீவிர விசாரணை!

சேலத்திலிருந்து நேற்று இரவு செங்கற்களை ஏற்றுக் கொண்டு லாரி ஒன்று திருச்சிக்குச் சென்று கொண்டிருந்துள்ளது.

சேலத்திலிருந்து நேற்று இரவு செங்கற்களை ஏற்றுக் கொண்டு லாரி ஒன்று திருச்சிக்குச் சென்று கொண்டிருந்துள்ளது. அந்த லாரி நாமக்கல் மாவட்டம் சின்ன வேப்ப நத்தம் என்ற பகுதி அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த  டாடா சுமோ கார் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்த உடன், லாரி டிரைவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

ttn

தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், அந்த 6 பேரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், காரில் இருந்த 2 பேர் நாமக்கல்லைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்ற 4 பேர் பீகாரை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இருப்பினும், விபத்து எப்படி நடந்தது என்ற விவரமும் தெரியவில்லை. ஆனால், லாரி டிரைவர் அங்கிருந்து தப்பித்து விட்டதால் அவரின் தூக்கக் கலக்கத்தில் இந்த  விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்துத்  தொடரும் போலீசார், தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.