கார் மீது மோதிய சிலிண்டர் லாரி… தீப்பிடித்து எரிந்து கோர விபத்து : தப்பியோடிய டிரைவருக்கு போலீசார் வலைவீச்சு!

 

கார் மீது மோதிய சிலிண்டர் லாரி… தீப்பிடித்து எரிந்து கோர விபத்து :  தப்பியோடிய டிரைவருக்கு போலீசார் வலைவீச்சு!

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சென்னை-பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் என்ற நபர் நேற்று காலை சென்னை நோக்கி, ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சென்னை-பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. அந்த லாரி வலது புறமாக திரும்ப முயன்ற போது, பிரசாந்த் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரின் முன்பகுதி லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்ட நிலையில், கார் கண்ணாடி முழுவதுமாக சேதமடைந்து பிரசாந்த்துக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அங்கு சென்ற பொதுமக்கள் பிரசாந்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

ttn

இதனிடையே காரின் முன்பகுதி தீப்பற்றி எரிய ஆரம்பித்து, அந்த தீ லாரியின் முன்பகுதியில் பரவியுள்ளது. தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் நெடு நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். லாரியில் இருந்த சிலிண்டர்களில் தீ பரவுவதற்கு முன்னர் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், பேராபத்து தவிர்க்கப்பட்டது. விபத்து நடந்தவுடன் அங்கிருந்த அந்த லாரி டிரைவர் தப்பியோடிய நிலையில், அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.