கார் பள்ளத்தில் கவிழ்ந்து ஒருவர் பலி; புத்தாண்டு கொண்டாட சென்ற நண்பர்களுக்கு நேர்ந்த விபரீதம்

 

கார் பள்ளத்தில் கவிழ்ந்து ஒருவர் பலி; புத்தாண்டு கொண்டாட சென்ற நண்பர்களுக்கு நேர்ந்த விபரீதம்

கொடைக்கானலுக்கு புத்தாண்டு கொண்டாட சென்ற நண்பர்களின் கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

பழனி: கொடைக்கானலுக்கு புத்தாண்டு கொண்டாட சென்ற நண்பர்களின் கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தயாராகி கொண்டிருக்கிறது. வண்ண வண்ண விளக்குகள், வான வேடிக்கைகள், புது உடை, இனிப்பு, மகிழ்ச்சி என இன்று நள்ளிரவு புத்தாண்டை வரவேற்க உலகமே தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், கொடைக்கானலுக்கு புதுவருடம் கொண்டாடுவதற்காக இனோவா காரில் கேரளா மாநிலம் திருச்சூரிலிருந்து நண்பர்கள் ஏழு பேர் சென்றுள்ளனர். அவர்களது கார் சவரிக்காடு என்ற இடம் அருகே சென்ற போது, நிலைதடுமாறி பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.

accident

இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மூன்று பேரை மீட்டு பழனி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். எஞ்சியுள்ள மூவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.