கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் இணைந்த ஜோதிகா

 

கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் இணைந்த ஜோதிகா

நடிகர் கார்த்தி நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் கார்த்தி நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் கடந்த மாதம் காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி வெளியான படம் தேவ். இதில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங்க் நடித்துள்ளார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 

அதையடுத்து ரெமோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க கார்த்தி ஒப்பந்தமாகியுள்ளார். ‘கைதி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கள்ளது. 

இந்நிலையில்,ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிகர் கார்த்திக்கு இனையான முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டார பேசப்பட்டு வருகிறது. தற்போது படத்தின் தொழில்நுட்பக் குழுவினரை இறுதி செய்யும் பணிகள் முடிந்த பின் விரைவில் படத்தின் மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

ஜீத்து ஜோசப் தமிழில் ‘பாபநாசம்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.