கார்த்தி, ஜோதிகா படத்தில் இணையும் ராட்சசன் பட பிரபலம்!
‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவர் நடிகை அம்மு அபிராமி. அதைத்தொடர்ந்து ‘ராட்சசன்’ படத்தில் ரோஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார். இவர் மீண்டும் தற்போது கார்த்தியுடன் இணைந்து நடிக்கிறார்.
‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவர் நடிகை அம்மு அபிராமி. அதைத்தொடர்ந்து ‘ராட்சசன்’ படத்தில் ரோஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார். இவர் மீண்டும் தற்போது கார்த்தியுடன் இணைந்து நடிக்கிறார்.
பாபநாசம் படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமான ஜீத்து ஜோசப் தற்போது கார்த்தியைக் கதாநாயகனாகக் கொண்டு புதிய படத்தை இயக்கிவருகிறார். இதில் மூலம் முதன்முறையாக கார்த்தி, ஜோதிகா இணைந்து நடிக்கின்றனர். இருவரும் சகோதர, சகோதரியாக நடிக்க இவர்களது தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார்.
Thrilled and super excited to be a part of this upcoming wonderful movie , Feeling blessed to work with #Jyothika mam , #Sathyaraj sir , And it’s my second movie with @Karthi_Offl sir after #dheeran ,
Looking forward to work with the great director and his team https://t.co/qyJqz5byjH— AmmuAbhirami (@Ammu_Abhirami) May 12, 2019
இந்த நிலையில் இதில் அம்மு அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது பற்றி அவர் கூறுகையில், ‘ஜோதிகா மற்றும் சத்யராஜ் போன்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளது. தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்குப் பின் இரண்டாவது முறையாக நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.