கார்த்தி சிதம்பரம் கைது?! திகார் சிறையில் 100வது நாளாக ப.சிதம்பரம்!

 

கார்த்தி சிதம்பரம் கைது?! திகார் சிறையில் 100வது நாளாக ப.சிதம்பரம்!

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐயினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இன்று 100 வது நாளாக அடைக்கப்பட்டிருக்கிறார். முன்னதாக சிபிஐ வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் கொடுக்கப்பட்டாலும், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் தொடர்ந்துள்ள வழக்கில் கைதாகி, தொடர்ந்து திகார் சிறையிலேயே கைதியாக இருந்து வருகிறார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐயினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இன்று 100 வது நாளாக அடைக்கப்பட்டிருக்கிறார். முன்னதாக சிபிஐ வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் கொடுக்கப்பட்டாலும், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் தொடர்ந்துள்ள வழக்கில் கைதாகி, தொடர்ந்து திகார் சிறையிலேயே கைதியாக இருந்து வருகிறார்.

chidambaram

 இந்நிலையில் டெல்லியில் உள்ள உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக  ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 
இன்று விசாரணைக்கு வந்த ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையில், அமலாக்கத்துறை சார்பில் வாதம் செய்த வழக்கறிஞர், ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் சிபிஐ வழக்கில் தான் கார்த்தி சிதம்பரம் முன் ஜாமீன் பெற்றுள்ளார் என்றும், அமலாக்கத்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரமும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறினார்.