கார்த்திகை தீப திருவிழாவிற்காக இந்த மூன்று நாட்கள் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் !

 

கார்த்திகை தீப திருவிழாவிற்காக இந்த மூன்று நாட்கள் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் !

கூட்டம் அங்கு அதிகமாக இருக்கும் என்பதால் மூன்று நாட்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்போவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இதில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபதிருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதனைக் காணப் பல்லாயிரக் கணக்கான மக்கள் திரள்வர். இந்த திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ttn

கடந்த 1 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி முன்பு உள்ள 61 அடி உயரத் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. 10 நாள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய விழாவான மகா தீபதிருவிழா 10ம் நாளான வருகிற 10ம் தேதி  நடைபெறுகிறது. அன்று மாலை  6 மணிக்குக் கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படும். தீபதிருவிழாவன்று பல்லாயிரக் கணக்கான மக்கள் திரள்வார்கள் என்பதால் மக்களின் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேரமராக்கள் பொருத்தும் பணி  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டம் அங்கு அதிகமாக இருக்கும் என்பதால் மூன்று நாட்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்போவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

bus

அதில், மொத்தமாக 2615 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், டிசம்பர் 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிறப்புப் பேருந்துகள் கோவை, மதுரை, திருநெல்வேலி, சென்னை, தூத்துக்குடி, விழுப்புரம், சேலம், ஓசூர், பெங்களூர், திருச்சி, தருமபுரி ஆகிய இடங்களிலிருந்து இயங்கும் என்றும் சென்னையிலிருந்து மட்டுமே 500 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.