காமெடி நடிகர் செந்தில் சொத்தை ஆட்டையை போட்ட புரொடக்சன் மேனேஜர்!
காலப்போக்கில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வந்த செந்தில் அரசியல் பிரச்சாரம், தற்போது சீரியல் என படுபிஸியாக உள்ளார்.
சென்னை: நடிகர் செந்தில் வீட்டை அபகரிக்க முயன்ற புரொடக்சன் மேனேஜர் கைது செய்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்தில் கூட்டணியை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. இந்த கூட்டணியின் வெற்றியே செந்தில் கவுண்டமணியிடம் அடிவாங்க சம்மதம் தெரிவித்தது தான் என்று
சினிமா விமர்சகர்கள் ஜாலியாக கமெண்ட் அடிப்பதும் உண்டு. காலப்போக்கில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வந்த செந்தில் அரசியல் பிரச்சாரம், தற்போது சீரியல் என படுபிஸியாக உள்ளார்.
இதனிடையே சென்னை சாலிகிராமம் பாஸ்கர் காலனி 3-வது தெருவில் உள்ள நடிகர் செந்திலுக்கு சொந்தமான கட்டிடத்தைக் கடந்த 2013-ம் ஆண்டு சினிமா துறையில் புரொடக்சன் மேனேஜராக இருக்கும் சகாயம் என்பவர் மாதம் 2 லட்சம் வாடகைக்கு எடுத்து “சர்வீஸ் அப்பார்ட்மென்ட்” நடத்தி வந்துள்ளார். 10 அறைகள் கொண்ட அந்த கட்டிடத்தின் வாடகையைக் கடந்த 6 மாதமாக தராமல் சகாயம் இழுத்தடித்துள்ளார். மேலும் செந்திலுக்கு தெரியாமல் அதிலுள்ள 7 அறைகளை வாடகைக்கு விட்டுள்ளதும் தெரியவந்தது.
இதுகுறித்து நடிகர் செந்தில் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சகாயத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.