காமாலைக் கண்களை கொண்ட பாஜகவின் பெரியார் குறித்த பதிவு அருவருக்கத்தக்கது; ராமதாஸ் காட்டம்!

 

காமாலைக் கண்களை கொண்ட பாஜகவின்  பெரியார் குறித்த பதிவு அருவருக்கத்தக்கது; ராமதாஸ் காட்டம்!

பெரியாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அவரின் பேச்சுகளும், கொள்கைகளும் இணையத்தில் பரவி வருகிறது.

திராவிட கட்சியின் முன்னோடி, பகுத்தறிவு பகலவன்  தந்தை பெரியாரின் 46ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், இயக்கங்கள் என பல்வேறு தரப்பினர் பெரியாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அவரின் பேச்சுகளும், கொள்கைகளும் இணையத்தில் பரவி வருகிறது.

ttn

இதனிடையே தமிழக பாஜகவின் டிவிட்டர்  பக்கத்தில்,  “மணியம்மையின் தந்தை ஈவே.ராமசாமியின் நினைவு தினமான இன்று!! குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஆதரித்து, போக்ஸோ (Pocso) குற்றவாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதிகொள்வோம்” என்று பதிவிட்டு சர்ச்சையை கிளப்பினர். இதற்கு பல்வேறு  தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த பதிவு  நீக்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவர் குறித்து தமிழக பாரதிய ஜனதாக் கட்சியும், அதன் ஐ.டி. பிரிவும்  டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து அருவருக்கத்தக்கது. இது அவர்களின் காமாலைக் கண்களைக் காட்டுகிறது. இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது!’ என்று பதிவிட்டுள்ளார்.