காப்பீடு தொகை வழங்காததால் தூத்துக்குடி,விருதுநகர் மாவட்ட விவசாயிகள் சென்னையில் போராட்டம்!

 

காப்பீடு தொகை வழங்காததால் தூத்துக்குடி,விருதுநகர் மாவட்ட விவசாயிகள் சென்னையில் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளையும் பிரச்சனைகளையும் முன்வைத்து அடிக்கடி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பல்வேறு கோரிக்கைகளையும் பிரச்சனைகளையும் முன்வைத்து அடிக்கடி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இன்னும் அவர்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைத்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில், தூத்துக்குடி,விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு  2018-19 ஆம் ஆண்டிற்கான மக்காச்சோள பயிருக்குப் பயிர்க் காப்பீடு தொகையைக் கொடுக்காமல்  நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் காலதாமதம் செய்து வருவதாகவும், அந்த பணத்தை ஏமாற்றி விட எண்ணியிருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

ttn

தொடர்ந்து, அந்த பணத்தைக் கொடுக்காமல் இருப்பதற்கு புள்ளியல் துறையும் வேளாண்மைத் துறையும் அந்த நிறுவனத்துக்கு உதவி செய்கின்றனர் என்றும் அவர்களுக்குத் தகவல் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்பதால் சென்னையில் அண்ணா சாலையில் உள்ள தேவா டவர்ஸ் முன்னால்,  நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டு இன்று விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.