காப்பி அடித்த விஜய் ஆண்டனி! களவாணியா- போலீஸா!?

 

காப்பி அடித்த விஜய் ஆண்டனி! களவாணியா- போலீஸா!?

திமிருபிடிச்சவன் படத்தை தொடர்ந்து மீண்டும் காக்கி சட்டை அணிந்து நடிக்கவுள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி.

சென்னை: திமிருபிடிச்சவன் படத்தை தொடர்ந்து மீண்டும் காக்கி சட்டை அணிந்து நடிக்கவுள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி.

சிவாஜி கணேசன்  தொடங்கி  சிவகார்த்திகேயன் வரைக்கும் பெரும்பாலான நடிகர்கள் போலீஸாக   நடித்துள்ளார்கள். நம்ம ஹீரோக்கள்  டிரெண்டுக்கு ஏற்ற மாதிரி காக்கி டிரெஸ் போட்டுக்கிட்டு பஞ்ச் டயலாக் பேசுவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில்  ‘யூனிபார்ம் போடலனானும் நான் போலீஸ்தான் என் உடம்பே காக்கி’ அப்படின்னு பஞ்ச் டயலாக்குடன்  களமிறங்கியுள்ளார்  நம்ம விஜய் ஆண்டனி.

kaaki ttn

ஏற்கனவே திமிருபிடிச்சவன் படத்தில் காக்கி சட்டை போட்ட நம்ம விஜய் ஆண்டனிக்கு மறுபடியும் காக்கி  சட்டை போடுகிற  ஆசை வந்திருக்கிறது. அதனாலையோ என்னவோ படத்துக்கும் ‘காக்கி’  என்றே  டைட்டில் வைத்துள்ளார்கள். 

ஓபன் தியேட்டர் சார்பில் தமிழினி, லிங்கவேலன் , சுகதேவ், முத்துலட்சுமி ஆகியோர் தயாரிக்கும் இந்த படத்தை வாய்மை படத்தை இயக்கிய அ.செந்தில் குமார் இயக்குகிறார்.  இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் சத்யராஜ், ஜெய், ஈஸ்வரி ராவ்  ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். முன்று வித்தியாசமான தோற்றங்களிலும், சத்யராஜ் இரண்டும் வித்தியாசமான தோற்றங்களிலும் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் பூஜையுடன் இதன் படப்பிடிப்பும் இன்று   ஆரம்பமாகி இருக்கிறது.

kaaki 1 ttn

இது ஒருபுறமிருக்க, காக்கி என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு படம் உருவாகி ரிலீஸ் செய்ய முடியாமல் அதன் படக்குழு திணறி வருகிறது. பூமிகா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர்  மணிவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் புதுமுக நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் உள்ளது.

 

kaaki ttn

விஜய் ஆண்டனியின் புதிய படமும் அதே  தலைப்பில் உருவாகவுள்ளதோடு இல்லாமல், காக்கி என்ற பெயரின் எழுத்து வடிவமைப்பும் கூட அப்பட்டமாக அதே ஸ்டைலில் இருக்கிறது. ஏற்கனவே பதிவாகியுள்ள ஒரு திரைப்படத்தின் பெயரை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் எப்படி விஜய் ஆண்டனியின் புதிய படத்துக்கு அளித்தார்கள் என்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

vijaty

இதை கூட கண்டு பிடிக்காமல் களத்தில் குதித்திருக்கும் விஜய் ஆண்டனி படத்தில் எப்படி திருடர்களைக் கண்டு பிடிப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!