காப்பான் ரூ.100 கோடி வசூல்: லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழக விவசாய அமைப்புகள் அனைத்திலிருந்தும் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது மகத்தான சாதனை
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படம் ரூ100 கோடி வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது
இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் காப்பான். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஹீரோயினாக சாயீஷா நடித்துள்ளார். அவர்களுடன் இணைந்து மோகன்லால், பொமன் இரானி, ஆர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சூர்யாவின் 37வது படமான இதில் அவர் பிரதமரைப் பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக வந்துள்ளார். குறிப்பாக இப்படத்தில் சூர்யா விவசாயிகளின் நலனுக்காகக் குரல் கொடுத்துள்ளார். இதனால் இப்படம் விவசாய குடும்பங்களைப் பெரிதும் ஈர்த்துள்ளது.
விமர்சன ரீதியாக இப்படம் வெற்றி பெற்றாலும் பொருளாதார ரீதியாக இந்த நிலை என்ன என்ற கேள்வி சூர்யா ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், காப்பான் திரைப்படம் ரூ100 கோடி வசூலித்த படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.
#KAAPPAAN Success meet Today.. Cheers & congratulations @LycaProductions @Suriya_offl @anavenkat @Mohanlal @arya_offl @sayyeshaa @bomanirani @thondankani @Jharrisjayaraj@msprabhuDop @editoranthony @KiranDrk @idiamondbabu #KaappaanBlockBuster ??#KaappaanSuccessMeet?❤ pic.twitter.com/zwdHtxq9ee
— Diamond Babu (@idiamondbabu) October 10, 2019
அதில், ‘எங்கள் லைககா நிறுவனத்தின் தயாரிப்புகளில் நற்பெயரும் நல்ல வசூலும் தேடித்தந்தது காப்பான் திரைப்படத்தின் முதல் சாதனை. கேரளாவிலும் அயல்நாடுகளிலும் அதிரிபுதிரி ஆன வசூல் கொண்டாட்ட சாதனை. மொத்த வசூலில் 100 கோடியை தொட்ட படங்களின் பட்டியலில் காப்பான் சேர்ந்தது முக்கிய சாதனை. தமிழக விவசாய அமைப்புகள் அனைத்திலிருந்தும் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது மகத்தான சாதனை. அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் குவியும் பாராட்டுக்கள் இன்னுமொரு சாதனை. இத்தனை சாதனைகளுக்கும் காரணமாயிருந்த காப்பான் அத்தனை நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், திரைப்பட வினியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், இந்த வெற்றியை அங்கீகரித்த ரசிகர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.