காப்பான் படத்தை வெளியிடலாம்: உயர் நீதி மன்றம் தீர்ப்பு

 

காப்பான் படத்தை வெளியிடலாம்: உயர் நீதி மன்றம் தீர்ப்பு

காப்பான் படம் வேறு ஒருவரின் கதையைத் தழுவி இயர்த்தப் பட்டதாக புகார் எழுந்ததையடுத்து அப்படத்தை வெளியிடலாம் என்று உயர் நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

காப்பான் படம் வேறு ஒருவரின் கதையைத் தழுவி இயர்த்தப் பட்டதாக புகார் எழுந்ததையடுத்து அப்படத்தை வெளியிடலாம் என்று உயர் நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘காப்பான்’. இப்படத்தில் மோகன்லால், சாயிஷா, ஆர்யா, சமுத்திரக்கனி, பூமான் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் சென்னை, குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் தனது கதையை தழுவி கே.வி.ஆனந்த் படத்தை இயக்கி இருப்பதாக வழக்கு தொடந்தார். 

இன்று இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், சூர்யா நடித்த காப்பான் திரைப்படம்  வெளியிட தடை இல்லை என  தெரிவித்ததாக தகவல் வெளியாயுள்ளது.