கான்ஸ்டபிளால் கற்பழிக்கப்பட்ட டாக்ஸி ட்ரைவர் -ஆண் மூலம் பலாத்காரத்துக்குள்ளான இன்னொரு ஆண்
ரயில்வே பாதுகாப்பு படை கான்ஸ்டபிள், சிவப்பு விளக்கு பகுதிக்கு ரெய்டு பண்ண சவாரி வர மறுத்த ஒரு டாக்ஸி ஓட்டுநரை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஞாயிற்றுக்கிழமை போலிசார் தெரிவித்தனர்.
ரயில்வே பாதுகாப்பு படை கான்ஸ்டபிள், சிவப்பு விளக்கு பகுதிக்கு ரெய்டு பண்ண சவாரி வர மறுத்த ஒரு டாக்ஸி ஓட்டுநரை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஞாயிற்றுக்கிழமை போலிசார் தெரிவித்தனர்.
சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (சி.எஸ்.எம்.டி) அருகே பி. டி மெல்லோ சாலையில் உள்ள பெஞ்சில் டாக்ஸி டிரைவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமித் தங்கட் என்ற ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள், ஒரு டாக்ஸி ட்ரைவரை அணுகி,தெற்கு மும்பையின் கிராண்ட் ரோடு பகுதியில் உள்ள விபச்சாரக் கூடம் ஒன்றுக்கு ரெய்டுக்கு வருமாறு கேட்டார்.
ட்ரைவர் மறுத்தபோது, கோபமடைந்த தங்கத் அவரை கொடூரமாக தாக்கி, ரயில்வே வளாகத்தில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்கு இழுத்துச் சென்று அவருடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டார்.
பின்னர், அவர் பாதிக்கப்பட்டவரை விட்டு வெளியேறி, அவரது பணம், டாக்ஸி சாவி மற்றும் பிற உடமைகளை பறித்துக்கொண்டதாக போலிசார் தெரிவித்தனர்.
ட்ரைவரின் புகாரைத் தொடர்ந்து எம்.ஆர்.ஏ மார்க் போலிஸ் குழு சம்பவ இடத்தை அடைந்தது, பின்னர் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் திங்கட்கிழமை ரயில்வே போலீசை கைது செய்தது.
அதிர்ச்சியூட்டும் சம்பவத்தால் போலீசார் ஆர்.பி.எஃப், தங்கத்தை தனது பணியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது, மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.