காந்தியை கோட்சே கொன்றது எப்படி? காந்தியின் உதவியாளர் அதிர்ச்சி தகவல்

 

காந்தியை கோட்சே கொன்றது எப்படி? காந்தியின் உதவியாளர் அதிர்ச்சி தகவல்

மகாத்மா காந்தியை கோட்சே சுலபமாக சுட்டு கொன்றது எப்படி என அவரின் உதவியாளர் கல்யாணம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

டெல்லி: மகாத்மா காந்தியை கோட்சே சுலபமாக சுட்டு கொன்றது எப்படி என அவரின் உதவியாளர் கல்யாணம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

தேச தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தி கடந்த 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி நாதுராம் கோட்சேவால் சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில் மகாத்மா காந்தியை கோட்சே எப்படி சுட்டு கொன்றார் என காந்தியின் உதவியாளரான கல்யாணம் கூறியுள்ளார். தமிழகத்தை சேர்ந்த கல்யாணம் பிரபல செய்தி நிறுவனத்துக்கு சமீபத்தில் அளித்த பேட்டியின் போது,

காந்தி கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக டெல்லி காவல்துறையினர் எச்சரித்திருந்தனர். அதனால், அவரை தங்களது பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரவும் முயன்றனர். ஆனால், இதை காந்தி மறுத்து விட்டார்.

பாதுகாப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு பாதுகாப்பு தேவையும் இல்லை. என்னை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவர முயன்றால், நான் டெல்லியை விட்டு வெளியேறி வேறெங்காவது சென்று விடுவேன்’ என காந்தி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். பாதுகாப்புக்கு காந்தி சம்மதித்து இருந்தால் அவரை சந்திக்க வந்தவர்களை எல்லாம் தகுந்த பரிசோதனைக்கு உட்படுத்தி இருக்கலாம். அவரது படுகொலை தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றார்.