‘காந்தியை கொன்ற கோட்சேவுக்கு நன்றி’ : பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி அதிரடி இடமாற்றம்!

 

‘காந்தியை கொன்ற கோட்சேவுக்கு நன்றி’ :  பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி அதிரடி இடமாற்றம்!

மகாத்மா காந்தியை விமர்சித்த பெண் ஐஏஎஸ் அதிகாரி குடிநீர் விநியோக துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

மும்பை: மகாத்மா காந்தியை விமர்சித்த பெண் ஐஏஎஸ் அதிகாரி குடிநீர் விநியோக துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

nidhi

மும்பை மாநகராட்சியில், துணை நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்தவர்  பெண் ஐஏஎஸ் அதிகாரி நிதி சவுத்ரி. இவர் கடந்த 17 ஆம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘மகாத்மா காந்தியின் உருவத்தை ரூபாய் நோட்டிலிருந்து நீக்குவோம். உலகம் முழுவதும் உள்ள காந்தி சிலைகளை அகற்றுவோம். அவர் பெயரில் இருக்கும் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சாலை அனைத்துக்கும் வேறு பெயர் வைப்போம். மகாத்மாவுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி இதுவாகத்தான் இருக்க முடியும். காந்தியை கொன்ற கோட்சேவுக்கு நன்றி’ என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவானது சர்ச்சையில் முடிந்தது. காந்தியை குறித்து அவதூறு பேசிய  ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

nidhi

இதையடுத்து விளக்கமளித்த  நிதி சவுத்ரி,  நான் காந்தியை  அவதூறாகப்  பேசவில்லை.  கோட்சேவை  கிண்டல் தான் செய்தேன்’ என்று கூறினார். இந்நிலையில்  நிதி சவுத்ரியை  மகாராஷ்டிரா  அரசு  பணிமாற்றம் செய்துள்ளது. அவர் மந்திராலயாவில் குடிநீர் விநியோக துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு,  அவரின் சர்ச்சை கருத்துக்கு  விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.

 

முன்னதாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் நிதி சவுத்ரியைப் பணி இடைநீக்கம் செய்யவேண்டும் என முதல்வர்  தேவேந்திர பட்னாவிஸுக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.