“காத்திருக்க சொன்னதால் ஆத்திரம்” கால்நடை மருத்துவமனையில் கலாட்டா செய்த ஹிந்தி நடிகர் நசிருதீன் ஷா மகள். .

 

“காத்திருக்க சொன்னதால் ஆத்திரம்” கால்நடை மருத்துவமனையில் கலாட்டா செய்த ஹிந்தி நடிகர் நசிருதீன் ஷா மகள். .

பாலிவுட்டில் நடிகரும் இயக்குனருமான நசிருதீன் ஷா ஹிந்தி சினிமாவில்  புகழ் பெற்று விளங்குகிறார் 
இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்,அவர் தனது திரை வாழ்க்கையில் மூன்று தேசிய திரைப்பட விருதுகள், மூன்று பிலிம்பேர் விருதுகள் மற்றும் வெனிஸ் திரைப்பட விழாவில் ஒரு விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

பாலிவுட்டில் நடிகரும் இயக்குனருமான நசிருதீன் ஷா ஹிந்தி சினிமாவில்  புகழ் பெற்று விளங்குகிறார் 

 

இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்,அவர் தனது திரை வாழ்க்கையில் மூன்று தேசிய திரைப்பட விருதுகள், மூன்று பிலிம்பேர் விருதுகள் மற்றும் வெனிஸ் திரைப்பட விழாவில் ஒரு விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். இந்திய சினிமாவுக்கு அவர் செய்த பங்களிப்புக்காக இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகளை வழங்கியுள்ளது.

 

heeba

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த அவரின் மகள் ஹீபா இன்று தனது பூனைக்கு உடல்நிலை சரியில்லாததால் ,அதை அழைத்துக்கொண்டு மும்பையில் உள்ள ஒரு கால் நடை மருத்துவமனைக்கு சென்றார் .அப்போது அங்கிருந்த பெண் ஊழியரிடம் தான் மருத்துவரை பார்க்கவேண்டுமென கேட்டதற்கு.அந்த பெண் ஊழியர் டாக்டர் அறுவை சிகிச்சை பிரிவில் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்,அதனால் ஐந்து நிமிடம் காத்திருக்குமாறு கூறினார் .

neera

உடனே கோபமுற்ற நஸீருத்தீன் மகள் ஹீபா நான் யார் தெரியுமா,என்னையே காத்திருக்க சொல்கிறாயா என்று கொதிப்படைந்து அந்த ஊழியரை தாக்க தொடங்கினார்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மருத்துவமனைக்கு வந்தவர்களிடையே பதட்டம் ஏற்பட்டது.உடனே போலீசுக்கு தகவல் கிடைத்து அங்கு விரைந்து வந்து அவர்களை அமைதிப்படுத்தி விசாரித்து வருகின்றனர். 
பொது இடங்களில் இப்படி பிரபலங்களின் வாரிசுகள் அநாகரிகமாக நடந்து கொள்வது அதிகரித்து வருகிறது .இப்படி நஸீருத்தீன் மகள் ஹீபா கலாட்டா  செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.பலர் அவரை கண்டித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்

.