காதல் விவகாரத்தால் பையனின் தாயை கம்பத்தில் கட்டிவைத்து அடித்த கொடூரம்!

 

காதல் விவகாரத்தால் பையனின் தாயை கம்பத்தில் கட்டிவைத்து அடித்த கொடூரம்!

மகனும் அதே பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி என்பவரின்  மகளும் காதலித்து வந்துள்ளனர்.

கடலூர் : காதல் விவகாரத்தில் ஈடுபட்ட பையனின் தாய் மின்கம்பத்தில் கட்டி வைத்துத் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

love

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த விளாங்காட்டூரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி – செல்வி தம்பதி . இவரது மகனும் அதே பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி என்பவரின்  மகளும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு கொளஞ்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.இதனால் கடந்த மாதம்  காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

attack

இந்நிலையில் செல்வியைப் பெண் குடும்பத்தார் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். தொடர்ந்து செல்வியை கட்டிவைத்து அடித்ததாகக்  கூறப்படுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சிலர்  போலீஸுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் செல்வியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார், கொளஞ்சியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.