காதல் வலை வீசி… நிர்வாண வீடியோ எடுத்து பணம் பறிக்கும் கும்பல் | அதிர்ச்சியில் போலீசார்

 

காதல் வலை வீசி… நிர்வாண வீடியோ எடுத்து பணம் பறிக்கும் கும்பல் | அதிர்ச்சியில் போலீசார்

காதல் வலைவீசி ஏமாற்றி வருவதில் ஆண், பெண் என்கிற பாரபட்சம் எல்லாம் இல்லாமல் போட்டி போட்டுக் கொண்டு ஏமாற்றிவருகிறார்கள். பொள்ளாச்சி சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகளை அத்தனை சீக்கிரத்தில் யாரும்  மறந்திருக்க மாட்டார்கள். தற்போது தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ள சம்பவம் போலீசாரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 

மூன்று  மாதங்களுக்கு முன்பு டெல்லியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஒரு பெண்ணின் தொடர்பு எண் கிடைத்தது. ஆரம்பத்தில் அந்தப் பெண்ணுடன் இளைஞர் நட்பாக பேசி வந்துள்ளார்.  இவர்களது நட்பு நாளடைவில் மிகவும் நெருக்கமானது. அதன் பின்னர் இருவரும் செல்போனில் பேசிப் பேசியே காதலிக்கத் துவங்கியுள்ளனர். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவில்லை என்றாலும் அலைபேசி மூலமாக தங்களின் காதலை வளர்த்துள்ளனர். டெல்லி போலீஸ்

ஒரு கட்டத்தில் செல்போனில் பேசிய அந்த பெண், இளைஞரை நேரில் சந்திக்க ஆசையாக இருப்பதாகவும், தனியாக சந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதற்கு அந்த இளைஞரும் சரி என்று சொல்லி பெண்ணை பார்க்க ஆசை ஆசையாக ஓடியிருக்கிறார். ஒரு தனி இடத்திற்கு இளைஞரை அழைத்து அந்த பெண், ஆவலுடன் வந்த நபரை ஒரு வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். அந்த வீட்டில் சில பெண்கள் இருந்துள்ளனர். இரண்டு ஆண்களும் இருந்துள்ளனர். அவர்களை மொத்தமாக பார்த்ததும் இளைஞருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இந்த சமயத்தில் வீட்டில் இருந்த அனைவரும் அந்த இளைஞரை மிரட்டி ஆடைகளை கழட்டி, நிர்வாணமாக வீடியோ எடுக்க ஆரம்பித்துள்ளனர். தங்களுக்கு 30 லட்ச ரூபாய் தர வேண்டும். இல்லையெனில் நிர்வாண வீடியோவை வலைப்பக்கங்களில் போட்டு விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். பயந்து போன  மனநிலையில் தன்னால் 10 லட்சம் தான் தரமுடியும் என்று சொல்லி வீட்டுக்கு போய் பணம் எடுத்து வருவதாக சொல்லி அங்கிருந்து தப்பி இருக்கிறார் அந்த இளைஞர்.  நேராக ரோகினி செக்டர் பகுதி காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் இளைஞனை மிரட்டி நிர்வாணமாக்கிய 6 பெண்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.