காதல் வலையில் வீழ்த்தும் மகன்; பாலியல் தொழிலுக்கு அனுப்பும் தாய்: விசாரணையில் வெளியான உண்மை!

 

காதல் வலையில் வீழ்த்தும் மகன்; பாலியல் தொழிலுக்கு அனுப்பும் தாய்: விசாரணையில் வெளியான உண்மை!

கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா  உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஏஜென்டுகளுடன் இவர்களுக்குத் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் சேர்ந்த சிறுமி ஒருவர் அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 21 ஆம் தேதி முதல் சிறுமியை காணவில்லை. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். 

ttn

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், புதுப்பட்டினம் ஆர் எம் ஐ நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன வேன் ஓட்டுநரான கணேஷ்  சிறுமியை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாகச் சென்னைக்கு அழைத்து வந்து இரண்டு நாட்கள் தங்கிய அவர், குஜராத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி அழைத்து சென்றது தெரியவந்தது. ஆல் இந்தியா டிராவல் ஏஜன்சி நடத்தி வரும் கணேஷின் தாய் சுகாசினி, சிறுமிகளை கடத்தி வெளி மாநிலங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த உதவியதாகக் கூறப்படுகிறது. இப்படி  குஜராத், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா  உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஏஜென்டுகளுடன் இவர்களுக்குத் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது.

ttn

இந்நிலையில் கணேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார்  சிறுமியை பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் தலைமறைவான சுகாசினியை தேடி வருவது குறிப்பிடத்தக்கது.