காதல் மனைவியை கொலை செய்த ஜோசியர்: அதிர்ச்சி சம்பவம்!

 

காதல் மனைவியை கொலை செய்த ஜோசியர்: அதிர்ச்சி சம்பவம்!

காதல் மனைவியை குத்தி கொலை செய்துவிட்டு, கணவன் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

படப்பை: காதல் மனைவியை குத்தி கொலை செய்துவிட்டு, கணவன் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையை அடுத்த செங்குன்றத்தை சேர்ந்தவர்  மகாராஜன். இவர் கிளி ஜோசியம் பார்த்து வந்துள்ளார். இவருக்கு நித்யலட்சுமி என்ற மனைவியும், கார்த்திக்  என்ற 4 வயது மகனும் உள்ளனர். 

husband wife

மகாராஜனும் நித்யலட்சுமியும் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், கருத்து வேறுபாட்டால் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டுள்ளனர்.  செங்குன்றம் பகுதியில் வசித்து வந்த இவர்கள் சமீபத்தில் படப்பையில் வாடகை வீடு எடுத்து குடியேறினர்.இதையடுத்து மீண்டும் கணவன் மனைவி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதால், நித்யலட்சுமி கோபித்து கொண்டு  மகனுடன் தனது தாயார் வீட்டிற்கு சென்றதோடு,  கணவர் மீது சென்னை எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

murder

புகாரின் அடிப்படையில் இருவரையும் அழைத்துப் பேசிய போலீசார் சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறியுள்ளனர். இனிமேல் நல்ல முறையில் சேர்ந்து வாழலாம் என்று கூறி மனைவியை தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனாலும் அவர்கள் சண்டை ஓய்ந்தபாடில்லை. சம்பவத்தன்று கணவன் – மனைவிக்கிடையே சண்டை முற்ற ஆத்திரத்தில் மனைவியை மகாராஜன் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த நித்யலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை தொடர்ந்து மகாராஜன் அங்கிருந்து தப்பியுள்ளார்.  

murder

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நித்யலட்சுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதை தொடர்ந்து தப்பியோடிய ஜோதிடர் மகாராஜனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மனைவியை கொலை செய்து கணவன் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் வாசிக்க: ‘99’ ஆக மாறிய ராம்-ஜானு: சகட்டு மேனிக்கு கலாய்க்கும் நெட்டிசன்கள்!