காதல் மனைவியை குத்தி கொலை செய்த கணவன்: சமரசம் பேச அழைத்து செய்த கொடூரம்!

 

காதல் மனைவியை குத்தி கொலை செய்த கணவன்: சமரசம் பேச அழைத்து செய்த கொடூரம்!

காதல்  மனைவியை  கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : காதல்  மனைவியை  கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் டி.எம்.எஸ் நகரைச் சேர்ந்த ரமேஷ். இவரது மனைவி பிரியா. ரமேஷும் பிரியாவும் கடந்த  10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.  இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதையடுத்து கடந்த சில மாதங்களாகக் கணவன்  மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்த்து வந்ததாக தெரிகிறது. 

இந்நிலையில்  பிரியாவை சமாதானம் பேச ரமேஷ் தனது தாய் வீட்டுக்கு அழைத்துள்ளார். அங்கு மீண்டும் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் வீட்டிலிருந்த கத்தியால் பிரியாவை சரமாரியாகக் குத்தியுள்ளார். வலியால்  பிரியா அலறித்துடிக்க, சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.  ரமேஷை மடக்கி பிடித்த அவர்கள், பிரியாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரியா உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து கொலை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரமேஷை  கைது செய்தது குறிப்பிடத்தக்கது.