காதல் திருமணம் செய்ய முயன்ற தம்பியை படுகொலை செய்த அண்ணன்: கோவையில் பரபரப்பு!

 

காதல் திருமணம் செய்ய முயன்ற தம்பியை படுகொலை செய்த அண்ணன்: கோவையில் பரபரப்பு!

தர்ஷினி  வேறு சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் இவர்களது காதலுக்கு கனகராஜின் தந்தை மற்றும் அண்ணன்  எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கோவை : வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய முயன்ற தம்பியை அண்ணனே வெட்டி கவுரவக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்தவர்கள்  கருப்பசாமி பூவாத்தாள் தம்பதி. இவர்களுக்கு வினோத், கனகராஜ், கார்த்திக் என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர் 
கனகராஜ், வெள்ளிப்பாளையம் ரோட்டில் உள்ள  தர்ஷினி என்ற பெண்ணை காதலித்து வந்தார்.  தர்ஷினி வேறு சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் இவர்களது காதலுக்கு கனகராஜின் தந்தை மற்றும் அண்ணன்  எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

murder

இதையடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக கனகராஜை திருமணம் செய்ய தர்ஷினி  வீட்டை விட்டு வெளியேறி கனகராஜின் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். ஆனால்  அவர்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ளாததால் மீண்டும் அப்பெண் அவரது வீட்டிற்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.  

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மீண்டும் தர்ஷினி  வீட்டை விட்டு வெளியேற, கனகராஜின் வீட்டில் தகராறு வெடித்துள்ளது. இதனால் அந்த பெண்ணை வாடகை  வீடு எடுத்து வைத்திரு. பிரச்னை தீர்ந்ததும் திருமணம் செய்து வைக்கிறேன் என்று கனகராஜின் தந்தை கருப்பசாமி  கூறியுள்ளார். அதன்படி அவரும் வீடு எடுத்து காதலியுடன் செல்ல இது அண்ணன் வினோத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

murder

இதனால் நேற்று மாலை கனகராஜின் வீட்டிற்கு சென்ற வினோத்,  மறைத்து வைத்து இருந்த அரிவாளால் கனகராஜை சரமாரியாக வெட்டினார்.  இதை தடுக்க வந்த தர்ஷினியையும் வெட்டி விட்டு அங்கிருந்தது தப்பியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 
மேலும் படுகாயம் அடைந்த கனகராஜின் காதலியை மீட்டு சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து வழக்குப்பதிவு செய் மேட்டுப்பாளையம் போலீசார் 2 தனிப்படைகள் அமைத்துத் தலைமறைவாக உள்ள வினோத்தை தேடி வந்த நிலையில்  அவர் இன்று காலை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.