காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு, ஆண்கள் கொடுத்த கொடூர தண்டனை: வைரல் வீடியோ!
காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு ஊர்மக்கள் கூடி வினோத தண்டனை வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜாபுவா: காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு ஊர்மக்கள் கூடி வினோத தண்டனை வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில் உள்ள தேவிகார் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேறு சாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையறிந்த ஊர் பொதுமக்கள், அப்பெண்ணுக்கு எதிராக அவசர அவசரமாகப் பஞ்சாயத்தை கூட்டினர். அப்போது அந்த பெண் தன் காதல் கணவரை ஒரு குறிப்பிட்ட தூரம் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டனர். அப்படி அந்த பெண் கணவரை தூக்கி செல்லும் வீடியோவானது வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அதில், கணவரைத் தோளில் சுமந்தபடி அப்பெண் நடந்து செல்கிறார். அவர்களைச் சுற்றி வரும் ஆண்கள் , நடனமாடியும், ஆரவாரம் செய்து கொண்டு வருகின்றனர். அந்த பெண் நிலைதடுமாறி கீழே உட்கார முயலும் போது, அவர்களை மிரட்டி மீண்டும் நடக்க வற்புறுத்துகிறார்கள். இந்த வீடியோவானது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரை கைது செய்ததோடு, இன்னும் சிலரைத் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.
#WATCH Madhya Pradesh: Villagers force a woman to carry her husband on her shoulders as a punishment in Devigarh, Jhabua allegedly for marrying a man from a different caste. (12.4.19) pic.twitter.com/aNUKG4qX7p
— ANI (@ANI) April 13, 2019
இதையும் வாசிக்க: பாடகராக அறிமுகமானார் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொகுப்பாளர்! அதுவும் இந்த படத்தில்!