காதல் கலந்த ஹாரர் படம் “ நெஞ்சில் ஒரு ஓவியம் “

 

காதல் கலந்த ஹாரர் படம் “ நெஞ்சில் ஒரு ஓவியம் “

நெஞ்சில் ஒரு ஓவியம் திரைப்படம் காதல் கலந்த ஹாரர் படம் என்று அப்படத்தை இயக்கிய ஜோதிபிள்ளை கூறியுள்ளார்

சென்னை: நெஞ்சில் ஒரு ஓவியம் திரைப்படம் காதல் கலந்த ஹாரர் படம் என்று அப்படத்தை இயக்கிய ஜோதிபிள்ளை கூறியுள்ளார்.

ஸ்ரீ விஷ்ணு பாதம் மூவி மேக்கர்ஸ் பட தயாரிப்பு சார்பில் ஜோதிபிள்ளை – சுகுணா கந்தசாமி இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “நெஞ்சில் ஒரு ஓவியம்” தங்கரதம் படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக அக்ரிஷா நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக ஜோதிபிள்ளை நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து போண்டாமணி,ஜெயமணி, யூசுப், தளபதி தினேஷ், பாப்சுரேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குநர் ஜோதிபிள்ளை கூறியதாவது” இது ஒரு காதல், செண்டிமெண்ட், காமெடி கலந்த, ஹாரர் திரைப்படம். மூன்று கோணங்களில் பயணிக்கும் திரைக்கதையை உள்ளடக்கிய கதை இது. இந்த படத்தில் கதாநாயகி அக்ரிஷாவிற்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும் அவரை சுற்றித்தான் இந்த  மூன்று திரைக்கதையும் பயணிக்கும்.  ஓவியராக இருக்கும் நாயகன் வெற்றி, பெய்ண்டிங் துறையில் மிகப்பெரிய சாதனைப் புரிவதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருக்கிறார். இடையில் காதலில் விழும் அவனுக்கு சில பிரச்சினைகள் வருகின்றன, அந்த பிரச்சனைகளை எப்படி கையாண்டான் அதிலிருந்து எப்படி வெளியேறி வாழ்கையில் ஜெயித்தான் என்பதை ஹாரர், காதல், செண்டிமெண்ட் கலந்து உருவாக்கியுள்ளோம். ஹாரர் காட்சிகள் மிகவும் அருமையாக இருக்கும். படப்பிடிப்பு சென்னை மற்றும் ஆந்திராவில் நடைபெற்றுள்ளது. மேலும் படம் விரைவில் வெளியாக உள்ளது” என்று கூறியுள்ளார்.