காதல் கணவன் மீது புகார் கொடுக்க சென்ற பெண்: போலீஸ் ஸ்டேஷனில் கையை பிளேடால் அறுத்துக் கொண்ட கணவன்!

 

காதல் கணவன் மீது புகார் கொடுக்க சென்ற பெண்: போலீஸ் ஸ்டேஷனில் கையை பிளேடால் அறுத்துக் கொண்ட கணவன்!

9 மாதங்களுக்கு மேலாக இதனை பொறுத்துக்கொண்ட ஐஸ்வர்யா, மன உளைச்சலால் ஆரோக்கியராஜ் மீது புகார் அளிக்க காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளார். 

சென்னை, அனகாபுத்தூர் காமராஜபுரத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் ஆரோக்கியராஜ் என்ற நபரைக் காதலித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் ஆகியுள்ளது. திருமணம் ஆனதிலிருந்து ஆரோக்கியராஜ் தினமும் குடித்துவிட்டு வந்து ஐஸ்வர்யாவை அடிப்பாராம். 9 மாதங்களுக்கு மேலாக இதனை பொறுத்துக்கொண்ட ஐஸ்வர்யா, மன உளைச்சலால் ஆரோக்கியராஜ் மீது புகார் அளிக்க காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளார். 

Arokiyaraj

ஐஸ்வர்யா புகார் அளிக்கப்போவதை அறிந்த ஆரோக்கியராஜ் ஐஸ்வர்யாவை பின்தொடர்ந்து காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு, என் மீதே புகார் கொடுக்கிராறாயா? என் மீது புகார் அளித்தால் நான் செத்துப் போய்விடுவேன் என்று கூறி ஆரோக்கியராஜ் தனது கையை நன்கு பிளேடால் காவல்நிலையத்திலேயே அறுத்துக் கொண்டுள்ளார்.

Arokiyaraj

அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், அவரிடம் இருந்த பிளேடை பிடுங்கிக் கொண்டு சிகிச்சைக்காகக் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.