காதலை சொல்ல நீரில் மூழ்கிய காதலன்.. நீருக்குள்ளேயே உயிரிழப்பு!!

 

காதலை சொல்ல நீரில் மூழ்கிய காதலன்.. நீருக்குள்ளேயே உயிரிழப்பு!!

நீரில் மூழ்கி காதலை வெளிப்படுத்த நினைத்த காதலன், தண்ணீரிலேயே மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள லூசியானா மாகாணத்தில் வசித்து வந்த ஸ்டீபன் வெபர் என்பவர், அதே பகுதியில் வசித்த கேனிஷா என்பவரை காதலித்து வந்தார். 

நீரில் மூழ்கி காதலை வெளிப்படுத்த நினைத்த காதலன், தண்ணீரிலேயே மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள லூசியானா மாகாணத்தில் வசித்து வந்த ஸ்டீபன் வெபர் என்பவர், அதே பகுதியில் வசித்த கேனிஷா என்பவரை காதலித்து வந்தார். 

lover

இவர்கள் இருவரும் அருகில் இருந்த வேறொரு நாட்டின் தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு, புதிய அனுபவத்திற்க்காக கடலில் 32 அடி ஆழத்தில் இருந்த ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

அச்சமயம் காதலியிடம் காதலை சொல்லி திருமணத்திற்கு ஒப்புதல் வாங்க கவிதை ஒன்றை எழுதியுள்ளார். மேலும் கடிதத்துடன் திருமணத்திற்கான மோதிரத்தையும் எடுத்துக்கொண்டு தண்ணீருக்குள் இறங்கி காதலை சொல்ல முடிவு செய்து இறங்கியுள்ளார்.

காதலை புதுவிதமாக வெளிப்படுத்திய ஸ்டீபனை கண்டு, பூரித்து போய் மெய்சிலிர்த்து பார்த்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

lover

தண்ணீரில் இறங்கி காதலை வெளிப்படுத்திய நேரத்தில், ஸ்டீபன் திடீரென மயங்கிய தருவாயில் நீருக்கு அடியில் சென்றுள்ளார். இதை பார்த்துக்கொண்டிருந்த கேனிஷா உடனடியாக ஹோட்டல் ஊழியர்களை அழைத்து விவரத்தை கூறிய பிறகு, இறங்கி ஸ்டீபனை மீட்பதற்குள் அவர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார்.

வாழ்வின் உச்சகட்ட சந்தோஷத்தில், உச்சகட்ட துக்க சம்பவமும் நிகழ்ந்துள்ளது என கேனிஷா மிகவும் வருத்தத்துடன் குறிப்பிட்டார். இதனை கேனிஷா தனது சமூக வலைப்பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.