காதலை சொல்லச்சொல்லி வற்புறுத்துவது நியாயமா? கவினுக்கு சேரன் எழுதிய கடிதம்!
பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி 79வது நாளை தொட்டுள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. த
சென்னை: பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி 79வது நாளை தொட்டுள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் சேரனுடன் சேர்த்து 8 பேர் உள்ளனர். இதில் சேரன் மட்டும் சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டு வீட்டினுள் நடப்பதை கவனித்து வருகிறார்.
#Day79 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/U612NSoPHU
— Vijay Television (@vijaytelevision) September 10, 2019
இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சேரன் கவினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கவின் அவர்களுக்கு, வணக்கம் தம்பி. அவ்வளவு தூரம் பேசிவிட்டு வந்தேன். இருவருமே தங்கள் விருப்பங்களை வெளியில் வந்து பேசி கொள்ளலாம். இருவரும் விளையாட்டில் கவனம் செலுத்துங்கள் என்று. அப்படி இருந்தும் லாஸ்லியாவிடம் இங்கேயே முடிவை சொல்லச் சொல்வது நியாயமா? அதை வலியுறுத்தலாமா? இது தவறாக தோன்றுகிறது. ஸ்டாப் பண்ணுவீங்களா? என்று கேட்டுள்ளார். இதை கேட்ட லாஸ்லியாவும் கவினும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.