காதலை சேர்த்து வைக்காத அப்பாவை தீர்த்து கட்டிய மகள் -கெட்ட சிப்பாயை சுட்ட குடும்பம் 

 

காதலை சேர்த்து வைக்காத அப்பாவை தீர்த்து கட்டிய மகள் -கெட்ட சிப்பாயை சுட்ட குடும்பம் 

மதுரா மாவட்டத்தில் உள்ள மித்தவுலி கிராமத்தில் ஒரு முன்னாள் ராணுவ வீரர் தனது டீன் ஏஜ் மகள் மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கியால் சுட்ட  பின்னர், அவர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். செவ்வாய்க்கிழமை, 41 வயதான சேத்ரம், ,தனது மகள் தனது காதலனோடு தன்னை சேர்த்து வைக்க குடும்பத்தினரோடு  நடத்திய பரபரப்பான   வாக்குவாதத்தைத் தொடர்ந்து,சேத்ரம்  தனது துப்பாக்கியை  எடுத்து அவரது  38 வயது மனைவி மற்றும் 17 வயது மகள் மீது சுட்டார் 

மதுரா மாவட்டத்தில் உள்ள மித்தவுலி கிராமத்தில் ஒரு முன்னாள் ராணுவ வீரர் தனது டீன் ஏஜ் மகள் மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கியால் சுட்ட  பின்னர், அவர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். செவ்வாய்க்கிழமை, 41 வயதான சேத்ரம், ,தனது மகள் தனது காதலனோடு தன்னை சேர்த்து வைக்க குடும்பத்தினரோடு  நடத்திய பரபரப்பான   வாக்குவாதத்தைத் தொடர்ந்து,சேத்ரம்  தனது துப்பாக்கியை  எடுத்து அவரது  38 வயது மனைவி மற்றும் 17 வயது மகள் மீது சுட்டார் 

up

அடுத்து தனது 13 வயது மகனை சுட அவர் துப்பாக்கியை  திருப்பியபோது, காயமடைந்த மகள் அவரிடமிருந்து துப்பாக்கியை பறித்து , அவரை  துப்பாக்கியால் சுட்டதில், முன்னாள் சிப்பாய்  சம்பவ இடத்திலேயே இறந்தார் .ஆனால் சேத்ராமின் மனைவியும் அவரது மகளும் ஒரு தனியார் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறார்கள்.சேத்ரம் சிங் ஜாட் ரெஜிமென்ட்டில்  பணியாற்றி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். 

up

சேத்ராம் சுட்டதில் ஒரு புல்லட் அவர் மனைவியின்  வலது புருவத்தில் பட்டு காயமேற்படுத்தியது , அடுத்து அவரின் மகளின்  அடிவயிற்றில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டன. பிறகு அவரின் மகள் அவரின் அப்பாவை  அவரது மார்பிலும் அடிவயிற்றிலும் சுட்டுக் கொன்றதாக  போலீசார் தெரிவித்தனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

up

அலகாபாத்தில் பயிற்சி வகுப்புகள் எடுத்து வரும் அப்பெண் இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்திருந்தாள். அவர் ஒருவரை காதலித்த பிரச்சினையில் அவரின் தந்தை எதிர்த்ததால் இது நடந்தது .அவரது தம்பி மதுராவில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.