காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்: மனித வெடிகுண்டாக மாறி பெண்ணை கொலை செய்த கொடூரம்!

 

காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்: மனித வெடிகுண்டாக மாறி பெண்ணை கொலை செய்த கொடூரம்!

மனித வெடிகுண்டாக மாறி, பக்கத்து வீட்டு பெண்ணை ஒருவர் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

வயநாடு: மனித வெடிகுண்டாக மாறி, பக்கத்து வீட்டு பெண்ணை ஒருவர் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே உள்ள நாய்கட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாசர். இவருக்கு அமீனா என்ற மனைவியும் மூன்று பெண் பிள்ளைகளும்  இருந்துள்ளனர். நாசர் தான் வசித்து வந்த பகுதியில் கணினி சேவை மையம் ஒன்றை நடத்தி வந்தார். 

bomb

இந்நிலையில் நேற்று நாசரின் வீட்டிலிருந்து வெடிகுண்டு  வெடித்த சத்தம் கேட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று நாசரின் மனைவியும் பக்கத்து வீட்டுக்காரன் பென்னி என்பவரும் உடல் சிதறி இறந்து கிடந்தனர். நாசர் அந்த சமயத்தில் தொழுகைக்குச் சென்றிருந்தாலும், குழந்தைகள் மூவரும் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தாலும் அவர்கள் இந்த தாக்குதலிலிருந்து தப்பியுள்ளனர். 

murder

இவ்விவகாரம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு  போலீசார் விரைந்தனர். மேலும்  தடயவியல் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து சிதறிய உடல் பாகங்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

police

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,  அமீனாவை பக்கத்து வீட்டுக்காரரான பென்னி காதலித்து வந்ததாகவும் ஆனால்  அதை அமீனா ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பென்னி  நாசர் இல்லாத சமயமாக பார்த்து உடம்பில் வெடிகுண்டைக் கட்டிக் கொண்டு அமீனாவின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மீண்டும் தன் காதலை  அமீனாவின் வெளிப்படுத்தியும் அவர் ஏற்காததால்  தனது உடலில் தயாராகக் கட்டி வைத்திருந்த வெடிகுண்டை பென்னி வெடிக்க செய்துள்ளார். இதில் 2 பேரும் உடல் சிதறி பலியாகி உள்ளனர் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிந்த போலீசார், தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இதையும் வாசிக்க: பொள்ளாச்சி வழக்கில் திடீர் திருப்பம்: ஆயுள் தண்டனைக்கு வழிவகுத்த வழக்குப்பதிவு!