காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத மாணவி மீது ஆசிட் வீசிய மாணவனுக்கு குண்டாஸ்!

 

காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத மாணவி மீது ஆசிட் வீசிய மாணவனுக்கு குண்டாஸ்!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவி சுசித்திரா மீது கடந்த 9 ஆம் தேதி, அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் முத்தமிழன் ஆசிட் வீசினார். 

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவி சுசித்திரா மீது கடந்த 9 ஆம் தேதி, அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் முத்தமிழன் ஆசிட் வீசினார். 

முத்தமிழனும், சுசித்திராவும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள், சுசித்திராவிடம் , முத்தமிழன் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அதற்கு சுசித்திரா சம்மதம் தெரிவிக்காததால் ஆத்திரத்தில் முத்தமிழன் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. கடந்த 9 ஆம் தேதி மாலை சுசித்ரா, கல்லூரி முடிந்து. தனது விடுதிக்குத் திரும்பி கொண்டிருக்கையில் முத்தமிழன் வழி மறித்து ஆசிட் வீசியுள்ளார். இதில் சுசித்ராவிற்கு தலை மற்றும் கழுத்து பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.

முத்தமிழன்

இதையடுத்து சுசித்ராவை மீட்ட அக்கம்பக்கத்தினர், ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முத்தமிழனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரை செய்தார். இதையடுத்து மாணவன் முத்தமிழன் மூது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.