காதலுக்காக ஆணாக மாறிய இளம்பெண்: காதலை ஏற்க மறுத்த காதலி!

 

காதலுக்காக ஆணாக மாறிய இளம்பெண்: காதலை ஏற்க மறுத்த காதலி!

பெண் ஒருவர், தான் நேசிக்கும் பெண்ணிற்காக ஆணாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோழிக்கோடு: பெண் ஒருவர், தான் நேசிக்கும் பெண்ணிற்காக ஆணாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் அர்சனா ராஜ். இவருக்கு, கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருப்பினும் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருந்து விவாகரத்து பெற்றார். 

இந்நிலையில், அர்ச்சனாவுக்கும்  அவர் அலுவலகத்தில் உடன் பணிசெய்யும் வேறு ஒரு பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் மிக நெருக்கமாக பழகி வந்துள்ளனர். ஆனால், அந்த சமயத்தில் அர்ச்சனாவின் தோழிக்கு அவரது வீட்டில் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அர்ச்சனா, அவரது தோழியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு அவரது தோழி அவரை ஆணாக மாறவேண்டும் என கூறியுள்ளார்.

sexchange

தன் காதலுக்காக ஆணாக மாறும் சிகிச்சை செய்த அர்ச்சனா, தன் பெயரையும் தீபு என மாற்றிக்கொண்டார். பின்னர், தன் தோழியிடம் சென்று திருமணத்திற்காக கேட்டபோது அவர் மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த தீபு, அவரது தோழி மீது போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.