காதலி வீட்டு முன்பு தீக்குளித்து உயிரிழந்த இளைஞர்! 

 

காதலி வீட்டு முன்பு தீக்குளித்து உயிரிழந்த இளைஞர்! 

சென்னை, எர்ணாவூர் பகுதியில், காதலி பேசாததால் அவரது வீட்டு முன்பு , தீக்குளித்த பட்டதாரி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்

சென்னை, எர்ணாவூர் பகுதியில், காதலி பேசாததால் அவரது வீட்டு முன்பு , தீக்குளித்த பட்டதாரி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்

சென்னை, எண்ணூர், எர்ணாவூர், கன்னிலால் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி, இவரின் மகள் மாலதி(23),  வடபழனி, துரைசாமி பார்க் சாலையை சேர்ந்தவர் சாதிக்பாட்சா, இவரின் மகன் மொய்தீன்(26), இவர் பிஎஸ்சி பட்டதாரி ஆவார். இவர்கள் இருவரும், அண்ணா சாலையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். அப்போது இருவரும் நட்பாக பழகி, பின்னர் காதலிக்க தொடங்கியுள்ளனர். இவர்களின் காதல், மாலதி வீட்டுக்கு தெரியவந்துள்ளது. இதனால், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாலதி பெற்றோர், அவரை வேலைக்கு அனுப்பவில்லை. ஆனால், மொய்தீன், மாலதியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதற்கு மாலதி தன் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆகையால், என்னை மறந்து விடு என கூறியுள்ளார். இதனால் விரக்தியடைந்த மொய்தீன், நேற்று இரவு, நண்பர் வெங்கடேசனை பைக்கில் அழைத்துக்கொண்டு மாலதி வீட்டிற்கு சென்றார். அங்கு, மாலதியிடம், தன்னிடம் பேச மறுப்பது ஏன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உங்களை திருமணம் செய்துக்கொள்ள முடியாது என மாலதி தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையில் வாக்கு வாதம் முற்றியது.

தீக்குளிப்பு

ஒரு கட்டத்தில், நீ இல்லை என்றால், நான் உயிரை விடுவது தவிர வேறு வழியில்லை எனக்கூறி ஏற்கனவே தயாராக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை உடம்பில் ஊற்றி தீ வைத்தார், இதை பார்த்ததும் மாலதி அலறினார். உடனே அவரை காப்பாற்ற முயற்சித்து, அவரும் தீயில் சிக்கினார். அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடி, இருவரையும் காப்பாற்றி, போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் இருந்த மொய்தீன், அதிகாலையில் உயிரிழந்தார், மாலதி படுகாயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இது தொடர்பாக எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.